நிதி அமைச்சுப் பதவியை பஸிலிடமிருந்து பறிக்குக! முருத்தெட்டுவே ஆனந்த தேரர் அழுத்தம்

0
133
Article Top Ad

“பஸில் ராஜபக்சவிடம் இருந்து நிதி அமைச்சைப் பறித்து, அவருக்கு வேறொரு அமைச்சுப் பதவியை வழங்க வேண்டும்.”

– இவ்வாறு அபயராக விகாரையின் பிரதான விகாராதிபதியான முருத்தெட்டுவே ஆனந்த தேரர் வலியுறுத்தினார்.

இது தொடர்பில் ஊடகங்களிடம் அவர் மேலும் கூறியதாவது:-

“பஸில் ராஜபக்சவுக்கு அபிவிருத்தி அமைச்சுப் பதவி வழங்கலாம்.

அதேவேளை, பிரதமர் மஹிந்த ராஜபக்ச அரசின் நிர்வாகத்தையும் மேற்பார்வையையும் பொறுப்பேற்க வேண்டும்.

தற்போதேய நெருக்கடித் தீர்வுகாண பிரதமர் முன்வர வேண்டும்” – என்றார்.