17 பேர் கொண்ட புதிய அமைச்சரவை பதவியேற்பு – டக்ளஸ் தேவானந்தாவிற்கு மீண்டும் மீன்பிடி அமைச்சு

0
283
Article Top Ad

இலங்கையில் 17 பேர் கொண்ட புதிய அமைச்சரவை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச முன்னிலையில் இன்று காலை பதவியேற்றுள்ளது.

இளைஞர்கள் மற்றும் மூத்த உறுப்பினர்கள் அடங்கிய கலப்பு அமைச்சரவையில் டக்ளஸ் தேவானந்தாவிற்கு மீண்டும் மீன்பிடி அமைச்சு வழங்கப்பட்டுள்ளது.

சமல் ராஜபக்ச, பசில் ராஜபக்ச, நாமல் ராஜபக்ச மற்றும் ஷசீந்திர ராஜபக்ச ஆகியோருக்கு புதிய அமைச்சரவையில் நியமனங்கள் வழங்கப்படவில்லை.

சரத் ​​வீரசேகர, ஜோன்ஸ்டன், டலஸ், பந்துல, காமினி லொக்குகே, மஹிந்தானந்த, ரோஹித உள்ளிட்டோருக்கு புதிய அமைச்சரவையில் நியமனம் வழங்கப்டவில்லை

இருப்பினும் மிகவும் சர்ச்சைக்குரிய உறுப்பினரான காஞ்சன விஜேசேகரவிற்கு மின்சாரம் மற்றும் எரிசக்தி அமைச்சு பதவி வழங்கப்பட்டுள்ளது.

இதேவேளை முஸ்லீம் மக்களை பிரதிநிதித்துவம் செய்யும் உறுப்பினரான நசீர் அஹமட் சுற்றாடல் அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார்.

தினேஷ் குணவர்தன – பொது சேவைகள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர்

ரமேஷ் பத்திரன – கல்வி மற்றும் பெருந்தோட்ட அமைச்சர்

நாசீர் அஹமட் – சுற்றாடல் அமைச்சர்

டக்ளஸ் தேவானந்தா – மீன்பிடித்துறை அமைச்சர்

கனக ஹேரத் – நெடுஞ்சாலைகள் அமைச்சர்

நாலக கொடஹேவா – ஊடகத்துறை அமைச்சர்

காஞ்சனா விஜேசேகர – மின்சாரம் மற்றும் எரிசக்தி அமைச்சர்

சன்ன ஜயசுமண – சுகாதார அமைச்சர்

பிரசன்ன ரணதுங்க – பொது பாதுகாப்பு, சுற்றுலா அமைச்சர்

திலும் அமுனுகம – போக்குவரத்து, கைத்தொழில் அமைச்சர்

விதுர விக்கிரமநாயக்க – தொழிற்துறை அமைச்சர்

ஜனக வக்கும்புர – விவசாயம் மற்றும் நீர்ப்பாசன அமைச்சர்

ஷெஹான் சேமசிங்க – வர்த்தகம் மற்றும் சமுர்த்தி அமைச்சர்

மொஹான் பிரியதர்ஷன டி சில்வா – நீர் வழங்கல் வடிகாலமைப்பு அமைச்சர்

விமலவீர திஸாநாயக்க – வனவிலங்கு மற்றும் வன வள பாதுகாப்பு அமைச்சர்

தேனுக விதானகமகே -விளையாட்டு, இளைஞர் விவகார அமைச்சர்

பிரமித பண்டார தென்னகோன் – துறைமுகங்கள் மற்றும் கப்பல் அமைச்சர்