21வது திருத்தம் ; பொதுஜன பெரமுனவில் இரட்டை நிலைப்பாடு!

0
131
Article Top Ad

21வது திருத்தத்தை விவாதிக்க ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன தலைமையகத்தில் கடந்த 26ஆம் திகதி நடைபெற்ற கலந்துரையாடலில் 21 நாடாளுமன்ற உறுப்பினர்களே பங்குபற்றியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

அரசியலமைப்பின் 21வது திருத்தத்தை தோற்கடிப்பது தொடர்பில் ஆலோசிப்பதற்காகவே இந்தக் கூட்டம் கூட்டப்பட்டுள்ளது. எனினும் பெரும்பாலான உறுப்பினர்கள் இக்கூட்டத்தில் கலந்துகொள்ளவில்லை.

இதேவேளை, அரசியலமைப்பின் 21வது திருத்தம் தொடர்பில் கலந்துரையாடுவதற்காக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன உள்ளிட்ட ஆளும் கட்சி உறுப்பினர்கள் குழுவை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ நாளை அழைத்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.