அமெரிக்க – சீனத் தூதுவர்கள் கொழும்பில் முக்கிய சந்திப்பு!

0
102
Article Top Ad

இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் ஜுலி சங் மற்றும் சீனத் தூதுவர் கி சென்ஹொங் ஆகியோருக்கு இடையே நேற்று சந்திப்பொன்று நடைபெற்றுள்ளது.

கொழும்பில் இந்த சந்திப்பு நடைபெற்றுள்ளது.

இதன்போது இலங்கையின் அரசியல், பொருளாதார நெருக்கடி நிலைமை தொடர்பில் கலந்துரையாடப்பட்டுள்ளது.

அரசியல் மற்றும் பொருளாதாரத்தில் ஸ்தீர் நிலையை எட்டுவதற்காக இலங்கை முன்னெடுக்கும் முயற்சிகளுக்கு தேவையான ஒத்துழைப்பை வழங்கவும் இதன்போது அவதானம் செலுத்தப்பட்டதாகவும் அமெரிக்கத் தூதுவர் தெரிவித்துள்ளார்.