பிரபாகரன் ஆயுதமேந்தத் தெற்கில் ஏற்பட் ட இனவாதம்தான் காரணம்!

0
108
Article Top Ad

தென்னிலங்கையில் ஏற்பட்ட இனவாதமே வடக்கில் பிரபாகரன் ஆயுதமேந்தக் காரணமானது எனத் தேசிய மக்கள் சக்தியின் தலைவரும் கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்தார்.

தேசிய மக்கள் சக்தியின் யாழ்ப்பாணம் மாவட்ட மாநாட்டில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவித்தபோதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

“எமது கட்சி தொடர்பாக வடக்கு, கிழக்கு தமிழ் மக்களிடையே ஒருவித சந்தேகம் காணப்படுகின்றது. அதனை நாம் ஏற்றுக்கொள்கின்றோம்.

எமது தலைமுறை கடந்த காலத்தில் போரில் ஈடுபட்டது. தென்னிலங்கையில் ஏற்பட்ட இனவாதமே வடக்கில் பிரபாகரன் ஆயுதமேந்தக் காரணமானது.

எமது குழந்தைகளும் எதிர்காலத்தில் போரில் ஈடுபட வேண்டுமா என்பதை நாம் சிந்திக்க வேண்டும். போர்க்காலத்தில் வடக்கு, கிழக்கில் பாரிய அழிவுகள் ஏற்பட்டன.

காணாமல்போனோர் பிரச்சினைக்குத் தீர்வு காணப்படவேண்டும். காணாமல்போனோரின் உறவுகள் எந்தளவு தூரம் பாதிக்கப்பட்டிருப்பார்கள் என்பது எனக்குத் தெரியும். எனது சகோதரன் காணாமல்போயிருந்தார்.

காணாமல் ஆக்கப்பட்டோர் பிரச்சினை தொடர்பில் உண்மையைத் தேடும் சபை ஒன்றை உருவாக்குமாறு நாம் கடந்த காலத்தில் வலியுறுத்தியிருந்தோம். ஆனால், அப்போது இருந்த அரசு அதனை ஏற்கவில்லை” – என்றார்.