திருகோணமலையில் இருந்து படகு மூலம் தனுஷ்கோடி தம்பதி கடற்கரையில் மயங்கிய நிலையில் மீட்பு

0
135
Article Top Ad

இலங்கையில் ஏற்பட்ட கடும் பொருளாதார நெருக்கடி காரணமாக இதுவரையிலும் 85-க்கும் மேற்பட்டவர்கள் அகதிகளாக தமிழகதிற்கு தஞ்சம் புகுந்துள்ளனர்.இந்நிலையில் இலங்கையில் இருந்து படகு மூலம் தனுஷ்கோடி சென்ற வயதான தம்பதியர் கடற்கரையில் மயங்கிக் கிடந்தத நிலையில் மீட்கப்பட்டுள்ளனர்.இவர்களுக்கு மருத்துவமனையில் சிகிச்சை இடமபெற்றுவரும் நிலையில் சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து பொலிஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

திருகோணமலையில் இருந்து படகு மூலம் வயதான தம்பதியர் 2 பேர் இன்று அதிகாலை ராமேஸ்வரம் அருகே உள்ள தனுஷ்கோடி கடற்கரையில் வந்து இறங்கினர்.இவர்கள் இருவரும் மயக்க நிலையில் கடற்கரையில் விழுந்து இருந்த நிலையில் அங்கு வந்த கடலோர பொலிஸார், அவர்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்