பாடசாலைகள் மூடப்படுவதை எதிர்த்து கொழும்பில் போராட்டம்!

0
99
Article Top Ad

கொழும்பில் பாடசாலைகள் மூடப்படுவதற்கு எதிராக சிறுவர்கள், பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர்கள் வீதியில் இறங்கி வருகின்றனர்

கொழும்பு நகரில் உள்ள பாடசாலைகளை மூடுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஆமர்வீதி ஜேதவனாராம ஆலயத்திற்கு முன்பாக கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.

போராட்டத்தில் ஏராளமான குழந்தைகள், பெற்றோர்கள், ஆசிரியர்கள் கலந்து கொண்டனர். இலங்கை ஆசிரியர் சங்கம் மற்றும் இலங்கை ஆசிரியர் சேவை சங்கம் ஆகியனவும் இணைந்து இந்த ஆர்ப்பாட்டத்தை ஏற்பாடு செய்திருந்தன.