மத்திய மலைநாட்டில் சீரற்ற காலநிலை ; நீர்த்தேக்கங்களின் வான்கதவுகள் திறப்பு!

0
97
Article Top Ad

மத்திய மலைநாட்டில் பதிவாகி வரும் அதிக மழை வீழ்ச்சி காரணமாக நீர்த்தேக்கங்களின் வான் கதவுகள் திறக்கப்பட்டுள்ளன.

இதனால் மத்திய மலைநாட்டில் நீர்த்தேக்கங்களுக்கு அண்மித்த தாழ் நிலப்பகுதியில் வாழும் மக்கள் மிகவும் அவதானமாக இருக்குமாறு அறிவுறுத்தப்படுகின்றனர்.

கெனியோன் நீர்த்தேக்கத்தில் இரண்டும் வான் கதவுகள் (03) இன்று அதிகாலை முதல் திறக்கப்பட்டுள்ளன.

நோர்ட்டன் பகுதியில் பெய்துவரும் மழை காரணமாக விமல சுரேந்திர நீர்த்தேக்கத்தில் நீர் மட்டம் உயர்ந்து வான்பாய்ந்து வருகின்றது.

இதே நேரம் காசல்ரி, மவுசாகலை, லக்ஸபான நவலக்ஸபான, பொல்பிட்டி உள்ளிட்ட நீர்த்தேக்கங்களின் நீர் மட்ட மிக வேகமாக உயர்ந்து வருவதாகவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.