கொழும்பில் அரசாங்கத்துக்கு எதிராக திரளும் பெருந்தொகையான மக்கள் ; தீவிரப்படுத்தப்படும் பாதுகாப்பு!

0
108
Article Top Ad

கொழும்பு காலி முகத்திடலில் இன்று இடம்பெறும் போராட்டத்தில் பல ஆயிரக்கணக்கில் மக்கள் ஒன்று திரண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

ஜனாதிபதி இல்லம் உட்பட பல முக்கிய பிரதேசங்களுக்கான பாதுகாப்பு பலப்படுத்த பட்டு இராணுவம் மற்றும் காவல்துறையினர் பெருமளவில் குவிக்கப்பட்டுள்ளனர். காலி முகத்திடலில் இடம்பெறும் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் ஐக்கிய மக்கள் சக்தி, மக்கள் விடுதலை முன்னணி உள்ளிட்ட பிரதான அரசியல் கட்சிகளும், சிவில் சமூக அமைப்புக்களும், மதத் தலைவர்களும் வெவ்வேறு பேரணிகளையும் ஆர்ப்பாட்டங்களையும் ஏற்பாடு செய்துள்ளனர்.

இதனால் கொழும்பில் பதற்ற நிலை காணப்படுவதுடன்,கொழுப்பின் பிரதான வீதிகளில் காவல்துறையினர் வீதித் தடைகளை ஏற்படுத்தி வருகின்றனர். போராட்டங்கள் வன்முறையாக மாறினால் சட்டப்படி கட்டுப்படுத்தப்படும் என்று காவல்துறை ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட காவல்துறை அத்தியட்சகர் நிஹால் தல்துவா தெரிவித்துள்ளார்.