ஜனதிபதி இன்று பதவி விலகுவார்!

0
99
Article Top Ad

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ இன்று பதவி விலகவுள்ளதாக முன்னாள் அமைச்சரும் பாராளுமன்ற உறுப்பினருமான வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார்.

சர்வகட்சி அரசாங்கத்தை அமைப்பதற்கான கலந்துரையாடலின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

ஜனாதிபதி பதவி விலகவுள்ளதாக தமக்கு தகவல் கிடைத்துள்ளது. புதிய அரசாங்கத்தை அமைப்பதற்கு தமக்கு 113 ஆதரவு இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.

ஜனாதிபதி வீட்டிற்கு செல்ல வேண்டும் என்பதே மக்களின் கோரிக்கையாகும் என்றும் அவர் கூறியுள்ளார்.