ஜனாதிபதி இராஜினாமா ; 7 நாட்களுக்குள் புதிய ஜனாதிபதி தெரிவு ; சபாநாயகர் உத்தியோகபூர்வமாக அறிவித்தார்!

0
84
Article Top Ad

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தமது பதவியை இராஜினாமா செய்துள்ளதை சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன உத்தியோகபூர்வமாக அறிவித்தார்.

புதிய ஜனாதிபதியை தெரிவுசெய்யும்வரை பதில் ஜனாதிபதியாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க செயல்படுவர்.

சபாநாயகர் அலுவலகத்தில் இடம்பெற்றுவரும் ஊடக சந்திப்பிலேயே அவர் இவ்வாறுகூறியுள்ளார்.

அரசியலமைப்பின் 38/1 சரத்தின் பிரகாரம் அவர் இராஜினாமா செய்துள்ளார். அரசியலமைப்பின் 40 சரத்துக்கு அமைய புதிய ஜனாதிபதி எதிர்வரும் 7நாட்களில் தெரிவுசெய்யப்படுவர். இதற்கு அனைத்து கட்சிகளும் பொது மக்களும் முழுமையான ஒத்துழைப்பை வழங்க வேண்டும் என சபாநாயகர் வேண்டுகோள் வியடுத்துள்ளார்.