உள்ளூராட்சி மன்றத் தேர்தலை விரைவில் நடத்துமாறு எதிர்க்கட்சி கோரிக்கை!

0
81
Article Top Ad

உள்ளூராட்சி மன்றத் தேர்தலை உடனடியாக நடத்துவதற்குத் தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி (SJB) தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவிடம் கோரிக்கை விடுத்துள்ளது.

தமது கோரிக்கையை முன்வைப்பதற்காக கட்சியின் உறுப்பினர்கள் குழுவொன்று இன்று தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு விஜயம் செய்துள்ளதாக SJB பாராளுமன்ற உறுப்பினர் நளின் பண்டார தெரிவித்துள்ளார்.

பாராளுமன்ற உறுப்பினர் பண்டார மேலும் கூறுகையில், இலங்கையின் தேர்தல் சட்டங்களின்படி, தேவையான கால அவகாசம் கடந்துவிட்டதால், எந்த நேரத்திலும் உள்ளூராட்சித் தேர்தலை நடத்துவதற்கு தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.

பாராளுமன்ற உறுப்பினர் நளின் பண்டாரவுடன் SJB பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்களான திஸ்ஸ அத்தநாயக்க மற்றும் எஸ்.எம். மரிக்கார் ஆகியோரும் சென்றிருந்தனர்.