இந்திய உயர்ஸ்தானிகருடன் பிரதமர் சந்திப்பு

0
66
Article Top Ad

இந்தியா – இலங்கை இடையே முன்மொழியப்பட்ட கூட்டுத் திட்டங்களை விரைவுபடுத்துவதற்கான வழிகள் மற்றும் வழிமுறைகள் குறித்து பிரதமர் தினேஷ் குணவர்தன, இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லேயுடன் கலந்தாலோசித்துள்ளார்.

இரு நாடுகளுக்கும் இடையிலான பொருளாதார உறவுகள் மற்றும் ஒத்துழைப்பு குறித்து விரிவான கலந்துரையாடல்களை நடாத்தியுள்ளனர்.

அலரிமாளிகையில் இந்திய உயர்ஸ்தானிகரைச் சந்தித்தபோதே இந்த கலந்துரையாடல் இடம்பெற்றதாக பிரதமரின் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

சந்திப்பின் போது, ​​கடன் மறுசீரமைப்பு வசதிகளை விரிவுபடுத்தி, நிவாரணப் பொருட்கள், உணவு மற்றும் மருந்துகளை வழங்கி தற்போதைய பொருளாதார நெருக்கடியை எதிர்கொள்ள இலங்கைக்கு உதவியமைக்கு பிரதமர் நன்றி தெரிவித்தார்.

சூரிய சக்தி மற்றும் காற்றாலை மின்சாரம், திருகோணமலை எண்ணெய் சேமிப்பு கிடங்குங்கள், துறைமுகங்கள் மற்றும் புகையிரதங்களின் கூட்டுத் திட்டங்கள் மற்றும் விவசாயம் மற்றும் மீன்பிடி அபிவிருத்திக்கான உதவிகள் உட்பட எரிசக்தி துறையில் அதிக இந்திய முதலீடுகளின் சாத்தியக்கூறுகள் குறித்து அவர்கள் விவாதித்தனர்.

இலங்கைக்கான பொருத்தமான சர்வதேச நாணய நிதியத் திட்டத்தைப் பெறுவதற்கு இந்தியா ஆதரவு அளித்ததற்கும் பிரதமர் நன்றி தெரிவித்தார்.

இந்த சந்திப்பின் போது பிரதமரின் செயலாளர் அனுர திஸாநாயக்க மற்றும் இந்திய உயர்ஸ்தானிகராலயத்தின் ஆலோசகர் எல்டோஸ் மெத்தியூஸ் ஆகியோரும் கலந்துகொண்டனர்.