தேசிய சபைக்கான பெயர் பட்டியல் பாராளுமன்றில் சமர்பிப்பு

0
79
Article Top Ad

அனைத்து கட்சிகளையும் இணைத்துக்கொண்டு அமைக்கப்பட்டுள்ள தேசிய சபைக்கு உறுப்பினர்கள் பெயரிடப்பட்டுள்ளதாக சபாநாயகர் அறிவித்தார்.

பாராளுமன்றத்தில் இன்று (23) சபாநாயகரின் அறிவிப்பின்போதே அவர் இதனை குறிப்பிட்டார். அதன் பிரகாரம்

தேசிய சபை அமைப்பதற்கு கடந்த 20ஆம் திகதி பாராளுமன்றத்தில் அனுமதிக்கப்பட்டதன் பிரகாரம் சபாநாயகரை தலைவராகக்கொண்டு, பிரதமர், எதிர்க்கட்சித்தலைவர், சபை முதல்வர், ஆளும் கட்சி பிரதம கொறடா ஆகியோரைக்கொண்டு இயங்கும் தேசிய சபையில் பணியாற்ற ஏனைய கட்சிகளின் அபிப்பிராயத்தின் பிரகாரம் உறுப்பினர்கள் பெயரிடப்பட்டுள்ளனர்.

தற்போது பாராளுமன்றத்தில் முன்வைக்கப்பட்டுள்ள தேசிய சபையில் உள்வாங்கப்படும் பாராளுமன்ற உறுப்பினர்கள் பின்வருமாறு.

டக்ளஸ் தேவானந்தா
நசீர் அஹமட்
டிரான் அலஸ்
சிசிர ஜெயக்கொடி
சிவநேசதுரை சந்திரகாந்தன்
ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ
ரவூப் ஹக்கீம்
பவித்ராதேவி வன்னியாராச்சி
வஜிர அபேவர்தன
ஏ.எல்.எம். அதாவுல்லா
பேராசிரியர் திஸ்ஸ விதாரண
ரிஷாத் பதியுதீன்
விமல் வீரவன்ச
வாசுதேவ நாணயக்கார
பழனி திகாம்பரம்
மனோ கணேஷ்
உதய கம்மன்பில
ரோஹித அபேகுணவர்தன
நாமல் ராஜபக்ஷ
ஜீவன் தொண்டமான்
ஜி.ஜி பொன்னம்பலம்
வணக்கத்திற்குரிய அதுரலியே ரதன தேரர்
அசங்க நவரத்ன
அலி சப்ரி
சீ.வீ விக்னேஸ்வரன்
வீரசுமண வீரசிங்க
சாகர காரியவசம்