அர்ஜுன மகேந்திரன் உள்ளிட்டோர் விடுதலை!

0
78
Article Top Ad

பிணைமுறி மோசடி தொடர்பான வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட அர்ஜுன மகேந்திரன் உள்ளிட்டவர்களை குற்றச்சாட்டுகளில் இருந்து கொழும்பு நிரந்தர தீர்ப்பாயம் விடுதித்துள்ளது.

பொதுச் சொத்து சட்டத்தின் கீழ் குற்றச்சாட்டுகளை முன்வைக்க முடியாது என கொழும்பு நிரந்தர தீர்ப்பாயம் தெரிவித்துள்ளது.

2015 ஆம் ஆண்டு இடம்பெற்ற இந்த பிணை முறி மோசடி தொடர்பாக குற்றம் சாட்டப்பட்ட நபர்களுக்கு எதிரான 10 குற்றச்சாட்டுகளை மூவரடங்கிய நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.

அதன்படி அர்ஜூன் அலோசியஸ், அர்ஜுன மகேந்திரன், ஜெப்ரி அலோசியஸ் மற்றும் கசுன் பலிசேன ஆகியோருக்கு எதிரான பத்து குற்றச்சாட்டுகள் கைவிடப்பட்டன.

இதனால் மொத்தம் 14 குற்றச்சாட்டுகளை உள்ளடக்கிய வழக்கில் 05 முதல் 14 வரையிலான அனைத்து குற்றச்சாட்டுகளிலிருந்தும் அவர்கள் விடுவிக்கப்பட்டுள்ளனர்.