கோத்தபாயவுக்கு உயர் நீதிமன்றம் அழைப்பாணை!

0
85
Article Top Ad

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை நீதிமன்றில் முன்னிலையாகுமாறு நோட்டீஸ் அனுப்புமாறு உயர் நீதிமன்றம் அறிவித்துள்ளது.

உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள மனு தொடர்பாக மனுதாரரின் வழக்கறிஞர்கள் விடுத்த கோரிக்கையை பரிசீலித்து உயர் நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.

மனித உரிமை செயற்பாட்டாளர்களான லலித் மற்றும் குகன் ஆகிய இருவரின் காணாமல் போன சம்பவம் தொடர்பான விசாரணையில் சாட்சியமளிக்க முன்னாள் ஜனாதிபதியை நீதிமன்றத்திற்கு அழைக்குமாறு மேன்முறையீட்டு நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை ரத்து செய்யுமாறு மனுதாரர் கோரியுள்ளார்.

இதன்படி, எதிர்வரும் டிசம்பர் மாதம் 15ஆம் திகதி மீண்டும் நீதிமன்றில் ஆஜராகுமாறு கோட்டாபய ராஜபக்ஷவுக்கு நோட்டீஸ் அனுப்புமாறு உச்ச நீதிமன்றம் அறிவித்தது.