தேசத்தை மீண்டும் கட்டியெழுப்ப கடுமையான முடிவுகளை எடுக்க வேண்டியுள்ளது!

0
104
Article Top Ad

வெற்றிகரமான கடன் மறுசீரமைப்பின் பின்னர் விவேகமான பொருளாதார முகாமைத்துவத்தை நடைமுறைப்படுத்த அரசாங்கம் தயாராக இருப்பதாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

வரிக் கொள்கை தொடர்பான விசேட உரையொன்றை இன்று (19) ஆற்றிய போதே இதனைக் குறிப்பிட்டார்.

நாட்டின் வருமானத்தை அதிகரிக்காமல் பொருளாதாரத்தை வலுப்படுத்த முடியாது என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார். தயக்கமின்றி, தேசத்தை மீண்டும் கட்டியெழுப்ப கடுமையான முடிவுகளை எடுக்க வேண்டிய கட்டாயத்தில் இருப்பதாக அவர் மேலும் கூறினார்.