தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைமையகம் டிக்கோயாவில் திறப்பு!

0
78
Article Top Ad

அட்டன், டிக்கோயா, என்பீல்ட், ஒட்டரி பிரதேசத்தில் நிர்மாணிக்கப்பட்டுள்ள தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைமையகக் கட்டிடத் தொகுதியான தாயகம் இன்று ஞாயிற்றுக்கிழமை திறந்து வைக்கப்பட்டது.

தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவரும் கொழும்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான மனோ கணேசன் தலைமையில் இடம்பெற்ற இந்தத் திறப்பு விழாவில் ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான சஜித் பிரேமதாச பிரதம அதிதியாக கலந்து கொண்டார்.

விசேட அதிதிகளாக இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச்செயலாளரும், நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான ஜீவன் தொண்டமான், இலங்கைக்கான இந்திய தூதுவர் கோபால் பாக்லே, கண்டி இந்திய உதவி உயர்ஸ்தானிகர் திருமதி.ஆதிரா ஆகியோர் கலந்து கொண்டனர்.

அத்துடன், இ.தொ.காவின் தேசிய அமைப்பாளர் சக்திவேல், உப தலைவர் பாரத் அருள்சாமி மற்றும் இ.தொ.காவின் சில முக்கியஸ்தர்களும் கலந்துகொண்டனர்.

தமிழ் முற்போக்கு கூட்டணியின் அழைப்பின் பேரில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் ஜீவன் தொண்டமான் உள்ளிட்ட சிலர் இவ்வாறு சிறப்பு அதிதிகளாக கலந்து கொண்டனர்.