தென் கொரியாவின் தலைநகர் நிகழ்ந்த சோகம் ;149 பேர் உயிரிழப்பு!

0
82
Article Top Ad

தென் கொரியாவின் தலைநகர் சியோலில் ஏற்பட்ட சன நெரிசலின் காரணமாக குறைந்தது 149 பேர் உயிரிழந்ததாகவும் மற்றும் 76 பேர் காயமடைந்ததாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது.

ஹாலோவீனைக் கொண்டாடும் முகமாக ஒரு பெரிய கூட்டம் பிரபலமான இதாவொன் (Itaewon) என்ற சந்நிதிக்குள் நுழைய முற் பட்ட போது இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.

உயிரிழந்தவர்களில் பெரும்பாலானவர்கள் பதின்பருவம் மற்றும் 20 வயதுடையவர்கள் என்று பொலிஸ் அதிகாரிகள் கூறுகின்றனர்.

பொலிஸார் இக் கூட்டத்தை கட்டுப்படுத்த முடியாமல் திணறியதாக சாட்சிகள் தெரிவித்துள்ளனர்.

முகமூடி அணிவது மற்றும் சமூக விலகல் மீதான கோவிட் கட்டுப்பாடுகள் நீக்கப்பட்ட பின்னர் சியோலில் நடந்த முதல் ஹாலோவீன் நிகழ்வு இதுவாகும்.

தென் கொரிய அதிபர் யூன் சுக்-யோல், காயமடைந்தவர்களுக்கு உதவ விசாரணை மற்றும் பணிக்குழுவுக்கு உத்தரவிட்டுள்ளார்.

அமெரிக்க அதிபர் ஜோ பிடன், பிரிட்டன் பிரதமர் ரிஷி சுனக், பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரான் உள்ளிட்ட பல உலகத் தலைவர்கள் இதற்கு இரங்கல் தெரிவித்துள்ளனர்.