தமிழ்த் தேசியக் கட்சிகள் கொழும்பில் இன்று முக்கிய பேச்சு

0
70
Article Top Ad

தமிழ்த் தேசிய பரப்பில் இயங்கும் கட்சிகளுக்கு இடையிலான முக்கிய சந்திப்பு இன்று நடைபெறவுள்ளது.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தனின் தலைமையில், கொழும்பில் உள்ள அவரது வீட்டில் இன்று மாலை 5 மணிக்கு இந்தச் சந்திப்பு இடம்பெறவுள்ளது.

தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வு தொடர்பில் பேச்சுக்கு வருமாறு தமிழ்க் கட்சிகளுக்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அழைப்பு விடுத்துள்ள நிலையில் அது தொடர்பில் இதன்போது கலந்துரையாடப்படவுள்ளது.

முன்னதாக குறித்த கூட்டம் கடந்த 15ஆம் திகதி இடம்பெறவிருந்தது.

எனினும், கூட்டத்துக்கான அழைப்பு விடுக்கப்பட்டதில் ஏற்பட்ட முரண்பாடு காரணமாக, தமிழ்க் கட்சிகள் குறித்த கூட்டத்தினை புறக்கணித்தன.

இந்தநிலையில், சகல கட்சிகளுடனும் கலந்துரையாடியதன் பின்னரே இன்று சந்திக்கத் தீர்மானித்ததாகத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் தெரிவித்தார்