பொலிஸ் புலனாய்வுப் பிரிவினருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட சிறீதரன் எம்.பி.

0
73
Article Top Ad

சிறுவனின் கைத்தொலைபேசியைப் பறித்த பொலிஸ் புலனாய்வுப் பிரிவினருடன் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ்ப்பாணம் – கிளிநொச்சி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். அத்துடன் கைத்தொலைபேசியையும் சிறுவனிடம் மீளப்பெற்றுக்கொடுத்தார்.

வன்னேரிக்குள வட்டாரத்தில் மாவீரர்களின் பெற்றோர்களைக் கௌரவிக்கும் நிகழ்வு நேற்று காலை நடைபெற்றது.

இந்த நிகழ்வைக் காணொளிப் பதிவாக்கிய சிறுவனின் கைத்தொலைபேசியைப் பொலிஸ் புலனாய்வுப் பிரிவினர் பறித்தனர்.

இதைக் கண்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன், பொலிஸ் புலனாய்வுப் பிரிவினருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதுடன் கைத்தொலைபேசியையும் குறித்த சிறுவனிடம் மீளப் பெற்றுக்கொடுத்தார்.