ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவராக மீண்டும் சஜித் 

0
64
Article Top Ad

ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவராக சஜித் பிரேமதாஸ மீண்டும் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

ஐக்கிய மக்கள் சக்தியின் வருடாந்த மாநாடு  பொரளை கெம்பல் மைதானத்தில் இன்று நடைபெற்றது.

இதன்போதே தலைவர் பதவிக்கு சஜித் பிரேமதாஸ ஏகமனதாக தெரிவு செய்யப்பட்டார்.

அதேவேளை, கட்சியின் பொதுச்செயலாளராக ரஞ்சித் மத்தும பண்டார மீண்டும் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

கட்சியின் தவிசாளராக சரத் பொன்சேகாவும், தேசிய அமைப்பாளராக திஸ்ஸ அத்தநாயக்கவும், பொருளாளராக ஹர்ஷ டி சில்வாவும் தெரிவு செய்யப்பட்டுள்ளார்கள்.

ராஜித சேனாரத்ன சிரேஷ்ட உப தவிசாளராகவும், வடிவேல் சுரேஷ் பிரதி செயலாளராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

உமா சந்திரா பிரகாஸுக்கும் பிரதி செயலாளர் பதவி வழங்கப்பட்டுள்ளது.

அத்துடன், நிறைவேற்றுக் குழு உறுப்பினர்களும் நியமிக்கப்பட்டுள்ளனர்.