ஜனாதிபதிக்கு பொதுஜன பெரமுன கடும் நிபந்தனை!

0
69
Article Top Ad

எதிர்க்கட்சியில் இருந்து அரசாங்கத்திற்கு ஆதரவளிக்க வருபவர்களுக்கு முன்னர் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுக்கு அமைச்சுப் பதவிகள் வழங்கப்பட வேண்டுமென அக்கட்சியின் சிரேஷ்டர்கள் குழுவினால் ஜனாதிபதிக்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

முன்னதாக தமது கட்சிக்கு 16 அமைச்சுப் பதவிகளை வழங்குவதற்கு இணக்கம் எட்டப்பட்டிருந்ததாகவும் அதனை முதலில் நிறைவேற்ற வேண்டும் எனவும் சுட்டிக்காட்டியுள்ளனர்.

அவ்வாறு செய்யாமல் புதிதாக வருபவர்களுக்கு அமைச்சுப் பதவிகள் வழங்கினால், அரசாங்கத்திற்கு ஆதரவளிப்பதில் இருந்து விலகிக் கொள்வதாகவும் அந்தக் குழு குறிப்பிட்டுள்ளது.

அத்துடன், வரவு செலவுத் திட்டம் நிறைவடைந்துள்ளதால், உடனடியாக அமைச்சரவையை புதிதாக நியமிக்குமாறும், எதிர்க்கட்சியில் இருந்து வந்தவர்களுக்கு முதலமைச்சர் பதவிகளை வழங்கக் கூடாது எனவும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இந்தக் கோரிக்கைகளை பசில் ராஜபக்ச ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிடம் தெரிவித்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.