கொழும்பில் 4 இடங்களில் பொலிஸார் அதிரடி வேட்டை – ஒரே நாளில் 25 பேர் கைது

0
59
Article Top Ad

கொழும்பு மாவட்டத்தில் மருதானை, தெமட்டகொடை, மாளிகாவத்தை, கிராண்ட்பாஸ் ஆகிய பிரதேசங்களில் மாளிகாவத்தை பொலிஸார் ஒரே நாளில் நடத்திய விசேட சுற்றிவளைப்பில் 25 சந்தேகநபர்கள் போதைப்பொருட்களுடன் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

நேற்றுக் காலை 8 மணி முதல் இரவு 10 மணி வரை இந்த விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது என்று பொலிஸ் ஊடகப் பிரிவு இன்று தெரிவித்துள்ளது.

இவ்வாறு கைதுசெய்யப்பட்டவர்களில் 10 பேர் பிடியாணை நிலுவையில் உள்ளவர்கள் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இதில், 8 சந்தேகநபர்கள் ஐஸ் போதைப்பொருளுடனும்,  இருவர் ஹெரோயினுடனும், இருவர் கஞ்சாவுடனும், மேலும் ஒருவர் 2.072 கிலோ கஞ்சாவுடனும் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

இவ்வாறு கைதுசெய்யப்பட்டவர்கள் 23 முதல் 54 வயதுக்குட்பட்ட மாளிகாவத்தை, மருதானை மற்றும் மட்டக்குளிய பிரதேசங்களைச் சேர்ந்தவர்கள் என்றும் பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.