‘நீ வரும்வரை நான் இருப்பேன்’ – தினேஷ் ஷாப்டரின் கையடக்கத் தொலைபேசியில் இருந்துசென்ற குறுஞ்செய்தி

0
83
Article Top Ad

ஜனசக்தி நிறுவனத்தின் பணிப்பாளர் தினேஷ் ஷாப்டரின் கையடக்கத் தொலைபேசியில் இருந்து கிரிக்கெட் வர்ணனையாளர் பிரையன் தோமஸின் கையடக்கத் தொலைபேசிக்கு குறுஞ்செய்தி அனுப்பப்பட்டதாக ஷாப்டர் கொலைச் சம்பவம் தொடர்பில் இதுவரை மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.

பிரையன் தாமஸின் கைபேசிக்கு தினேஷ் ஷாப்டரின் கொலையாளி மூலம் குறுஞ்செய்தி அனுப்பப்பட்டது என்பது தெளிவாகியுள்ளது.

அத்துடன் கடந்த 15ஆம் திகதி குருந்துவத்தை மல்பாறையில் உள்ள ஜனசக்தி நிறுவனத்தின் பணிப்பாளர் தினேஷ் ஷாப்டர் தனது இல்லத்திலிருந்து பயணித்த கார் நேரடியாக பொரளை பொது மயானத்திற்கு சென்றுள்ளதாக குற்றப் புலனாய்வுப் பிரிவினர் மேற்கொண்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் புலனாய்வுக் குழுக்கள், தினேஷ் ஷாப்டர் பிற்பகல் 2.06 மணியளவில் வீட்டை விட்டு வெளியேறியதாகவும், வீட்டை விட்டு வெளியேறிய அரை மணி நேரத்திற்குள் இந்தக் குற்றம் நடந்துள்ளதாகவும் ஊகிக்கின்றனர்.

தினேஷ் ஷாப்டர் தனது வீட்டை விட்டு வெளியேறிய நேரம் முதல், அவரது பாதை பாதுகாப்பு கேமரா தரவுகளின் பகுப்பாய்வில் அவரது கார் நேரடியாக பொரளை பொது மயானத்திற்கு வந்துள்ளமை கண்டுபிடிக்கப்பட்டது. வழியில் ஒருவர் காரில் ஏறினாரா அல்லது நபரை சந்திக்கும் எதிர்பார்ப்புடன் மயானத்திற்கு சென்றாரா என மேலதிக விசாரணைகள் இடம்பெற்று வருவதாக குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

மயானத்துக்குள் காரை கொண்டு வந்து நிறுத்திய இடத்தை அவதானிக்கும் போது பொரளை பொது மயானத்தை நன்கு புரிந்து கொண்ட ஒருவரே இக்குற்றத்தில் ஈடுபட்டுள்ளதாக தெரிகிறது.

கிரிக்கெட் வர்ணனையாளர் பிரையன் தாமஸின் கைபேசிக்கு “உனக்காக காத்திருக்கிறேன்” என்ற குறுஞ்செய்தி அனுப்பப்பட்டதாக விசாரணையில் தெரியவந்துள்ளது.

பொரளை பொது மயானம் சென்றுவிட்டது தினேஷ் ஷாப்டரின் கைபேசியில் இருந்து அவரை அந்த இடத்திற்கு அழைத்து குற்றத்தை செய்த நபர் அல்லது குழுவினரால் இந்த செய்தி அனுப்பப்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுவதாக மூத்த போலீஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

இதேவேளை பிரையன் தாமஸ் அந்த குறுஞ்செய்திக்கு பதிலளித்துள்ளார். “எனக்கும் உங்களுக்கும் எந்த தொடர்பும் இல்லை. உங்களைச் சந்திக்க விரும்பவில்லை என்ற பொருளில் ஆங்கிலத்தில் குறுந்தகவல் அனுப்பப்பட்டதாகவும் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

இந்த கொலைத் திட்டம் தீட்டியவர்கள் பிரையன் தாமஸை அந்த இடத்திற்கு அழைத்து வந்து இந்தக் குற்றத்திற்காக அவரைக் குற்றவாளியாக்க முயன்றுள்ளனரா என்ற சந்தேகமும் எழுந்துள்ளது.

செய்திகள் பரிமாறப்பட்ட பிரையன் தாமஸ் மற்றும் தினேஷ் ஷாப்டர் ஆகியோரின் கையடக்கத் தொலைபேசிகள் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைப்பற்றப்பட்டு கணினி தடயவியல் ஆய்வகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டதில் பல தகவல்கள் வெளியாகியுள்ளதாக பொலிஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இது சம்பந்தமாக பிரையன் தோமஸின் வீட்டில் உள்ள பாதுகாப்பு கமரா அமைப்பு கூட குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் ஆராயப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் சட்டத்தரணி நிஹால் தல்துவா குறிப்பிட்டுள்ளார்.

கொலை நடந்தபோது பிரையன் தாமஸ் வீட்டை விட்டு வெளியே இருந்ததாகவோ அல்லது இந்தக் குற்றத்தில் ஈடுபட்டதாகவோ இதுவரை எந்தத் தகவலும் வெளியாகவில்லை என்றார். இக்கொலை தொடர்பான விசாரணைகளை மேற்கொண்டு வரும் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் ஒழுங்கமைக்கப்பட்ட குற்ற மற்றும் கொலைப் புலனாய்வுப் பிரிவின் அதிகாரிகள் 23 பேரிடம் வாக்குமூலங்களைப் பெற்றுள்ளதாக நிஹால் தல்துவ தெரிவித்தார்.