ஜனவரியில் சில பொருட்களுக்கான இறக்குமதி தடை நீக்கம்

0
60
Article Top Ad

இறக்குமதி தடை விதிக்கப்பட்டுள்ள சில பொருட்களுக்கான தடை எதிர்வரும் ஜனவரி மாதமளவில் வாபஸ் பெறப்படவுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.

2020ஆம் ஆண்டுமுதல் நாட்டில் ஏற்பட்ட அந்நிய செலாவணி பாற்றக்குறை காரணமாக 1,465 வகையான பொருட்களுக்கு இறக்குமதி தடை விதிக்கப்பட்டுள்ளது. இவற்றில் 795 பொருட்களுக்கு இறக்குமதி கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டுள்ளன.

இந்நிலையில் எதிர்வரும் ஜனவரி மாதம் முதல் மேலும் சில பொருட்களுக்கான கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.