வேடுவர்களும் தேர்தலில் போட்டியிடத் தீர்மானம்!

0
68
Article Top Ad

உள்ளூராட்சி சபைத் தேர்தல் நடத்தப்பட்டால் வேடுவர் இனத்தவர்களும் களமிறங்கத் தீர்மானித்துள்ளனர்.

தமது இனத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தி வேட்பாளர்களைத் தெரிவு செய்யுமாறு வேடுவர் இனத் தலைவர் ஊருவரிகே வன்னியலத்தோ அந்தந்த மாவட்டங்களில் உள்ள வேடுவர் இனத் தலைவர்களுக்கு ஆலோசனை வழங்கியுள்ளார்.

அதன்படி, அம்பாறை, வாகரைபொல்பெத்த போன்ற இடங்களில் உள்ள வேடுவர் இனத்தில் இருந்து வேட்பாளர்கள் களமிறங்கவுள்ளனர்.

கடந்த காலங்களில் தமது இனத்தின் பிரச்சினைகள் பல தீர்க்கப்படவில்லை என்று வேடுவர் இனத் தலைவர் ஊருவரிகே வன்னியலத்தோ ஊடகங்களிடம் தெரிவித்தார்.