செனல் – 4 வெளியிட்ட ஈஸ்டர் தாக்குதல் குற்றச்சாட்டு அறிக்கைகள் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும்

0
41
Article Top Ad

ஈஸ்டர் தாக்குதலுடன் தொடர்புடைய ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் அறிக்கை மற்றும் பாராளுமன்ற தெரிவுக்குழுவின் அறிக்கை ஆகியன பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

தற்போதைய விசாரணைகளின் அடிப்படையில் இறுதித் தீர்மானத்திற்கு வருவதற்கு முன்னர், அவை பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளதாக ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.

மேலும், ஈஸ்டர் குண்டுவெடிப்பு தொடர்பில் செனல் 4 விடுத்துள்ள குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் விசாரணை நடத்துவதற்கு ஓய்வுபெற்ற உயர் நீதிமன்ற நீதிபதி தலைமையில் குழுவொன்றை நியமிப்பதற்கும் ஜனாதிபதி தீர்மானித்துள்ளார்.

இதனடிப்படையில், ஈஸ்டர் தாக்குதலுடன் தொடர்புடைய பிரதான சந்தேக நபர் தொடர்பில் முன்னாள் சட்டமா அதிபர் ஒருவர் முன்வைத்த குற்றச்சாட்டை விசாரிப்பதற்காக பாராளுமன்றத் தெரிவுக்குழுவொன்று நியமிக்கப்படும் எனவும் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.