இலங்கை கிரிக்கெட்டை வலுப்படுத்த மூவர் அடங்கிய குழு; விளையாட்டு அமைச்சர் எடுத்த முடிவு

0
36
Article Top Ad

கிரிக்கெட்டுக்கான சர்வதேச விளையாட்டு ஒருங்கிணைப்புக் குழுவை நியமிக்க விளையாட்டுத்துறை அமைச்சர் ரொஷான் ரணசிங்க நடவடிக்கை எடுத்துள்ளார்.

அதற்கமைய, சிதத் வெத்தமுனி, உபாலி தர்மதாச மற்றும் ரகித நிர்மல ராஜபக்ஷ ஆகியோரைக் கொண்ட மூவரடங்கிய குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது.

இலங்கையில் கிரிக்கெட்டின் வளர்ச்சி, சுயாதீனத்தன்மை மற்றும் வெளிப்படைத்தன்மையைப் பாதுகாப்பதற்காக சர்வதேச மற்றும் தேசிய கிரிக்கெட் குழுக்களை கண்காணித்தல், தொடர்புகொள்ளுதல் மற்றும் ஒருங்கிணைப்பது இந்தக் குழுவின் முதன்மைப் பணியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.