இலங்கை அணியின் மூத்த ஆதரவாளராக அறியப்பட்ட பெர்சி அபேசேகர மறைவு

0
30
Article Top Ad

சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இலங்கை அணியை உற்சாகப்படுத்தும் மூத்த ஆதரவாளராக அறியப்பட்ட பெர்சி அபேசேகர இன்று காலமானார்.

அவர் தமது 87ஆவது வயதில் கொழும்பில் காலமானார்.

பெர்சி அபேசேகர, உள்ளூர் மற்றும் சர்வதேச துடுப்பாட்ட வீரர்கள் மத்தியிலும் மிகவும் பிரபலமானவராக இருந்தவர்.

எதிரணி அணியின் வீரர்களுடன் இவர் நகைச்சுவையான கலந்துரையாடல்களை நடத்துபவராகவும் அறியப்பட்டார்.

‘Uncle Percy’ என்றே கிரிக்கெட் ரசிகர்கள் இவரை அழைத்தனர்.

கடந்த ஆகஸ்ட் மாதம் தனது 87 ஆவது பிறந்தநாளை இவர் கொண்டாடி இருந்ததுடன், அண்மைக் காலமாக உடல்நிலை பாதிக்கப்பட்டு இருந்த நிலையிலேயே இன்று காலமானார்.

இலங்கை கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபை 5 மில்லியன் ரூபாவை பெர்சி அபேசேகரவின் நல்வாழ்வு மற்றும் ஆரோக்கியத்தைப் பேணுவதற்கு வழங்கியிருந்தது.

பெர்சி அபேசேகர 1979 உலகக் கிண்ணத்தில் இருந்து இலங்கை அணிக்கு ஆதரவாக சர்வதேச போட்டிகளில் இலங்கைக் கொடியை உயர்த்தியவராவார்.

அன்னாரின் இறுதிக் கிரியைகள் குறித்து அரவது குடும்பத்தார் நாளைய தினம் அறிவிக்க உள்ளனர்.