ஜம்மு-காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து ரத்து; இந்திய உச்ச நீதிமன்றம் தீர்ப்பு

0
30
Article Top Ad

இந்திய மாநிலமான ஜம்மு-காஷ்மீருக்கு பிரதமர் நரேந்திர மோடியின் அரசாங்கம் வழங்கிய சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்ய எடுக்கப்பட்ட முடிவு சட்டப்பூர்வமானது என்று இந்திய உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தலைமையிலான ஐந்து பேர் கொண்ட அமர்வு முன் விசாரணை பல ஆண்டுகளாக நீடித்த நிலையில், இன்று மூன்று வெவ்வேறு தீர்ப்புகள் வழங்கப்பட்டன.

எவ்வாறாயினும், தொடர்புடைய மூன்று நீதிபதிகளில் தீர்ப்புகளாலும், இந்திய அரசியலமைப்பின் 370வது பிரிவை ரத்து செய்ய எடுக்கப்பட்ட முடிவு சட்டப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ஜம்மு மற்றும் காஷ்மீர் இந்தியாவின் மற்ற பகுதிகளுக்கு சமமான நிலைக்கு கொண்டு வரப்பட்டது.

370வது சட்டப்பிரிவு தற்காலிகமானது என்றும், அந்த சட்டப்பிரிவின் கீழ் ஜம்மு காஷ்மீர் இந்தியாவுடன் இணையும் போது அது இறையாண்மையை பெற்றுக்கொள்ள முடியாது என்றும் நீதிபதிகள் தீர்ப்பளித்தனர்.

அதன்படி, இந்தியாவில் உள்ள மற்ற மாநிலங்களைப் போல் ஜம்மு-காஷ்மீர் மாநிலத்திலும் தேர்தலை நடத்தி, அடுத்த ஆண்டு செப்டம்பர் 30ஆம் திகதிக்கு முன்னதாக தேர்தல் நடத்த வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.