சபாநாயகருக்கு எதிரான நம்பிக்கையில்லாத் தீர்மானம் தோல்வி

0
13
Article Top Ad

சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவுக்கு எதிரான நம்பிக்கையில்லாத் தீர்மானம் 42 மேலதிக வாக்குகளால் தோல்வியடைந்துள்ளது.

நம்பிக்கையில்லாத் தீர்மானத்துக்கு ஆதரவாக 75 வாக்குகளும் எதிராக 117 வாக்குகளும் அளிக்கப்பட்டன.

ஆளுங்கட்சியான பொதுஜன பெரமுன தீர்மானத்தை எதிர்த்து வாக்களித்துடன், எதிர்க்கட்சிகளாக ஐக்கிய மக்கள் சக்தி, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, தேசிய மக்கள் சக்தி உட்பட அனைத்து எதிர்க்கட்சிகளும் பிரேரணைக்கு ஆதரவாக வாக்களித்தன.

எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தியால் இந்த பிரேரணை கொண்டுவரப்பட்டது.

நாடாளுமன்ற உறுப்பினர்களின் சிறப்புரிமைகளை மீறுகின்றார், நிகழ்நிலைக் காப்புச் சட்டத்தினை சான்றுரைப்படுத்தியமை அரசியலமைப்பு முரணானது, பொலிஸ்மா அதிபர் நியமனத்தில் அரசியலமைப்புச் சபையை கையாண்டமை தவறு உள்ளிட்ட விடயங்களை மையப்படுத்தியே சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்த்தனவுக்கு எதிரான நம்பிக்கையில்லாத் தீர்மானத்ததை எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி முன்வைத்திருந்தது.