ஈரான் உடனான அமை​திப் பேச்​சு​வார்த்தை தோல்வி அடைந்​தால் மீண்டும் தாக்குதல்

0
8
Article Top Ad

ஈரான் உடனான அமை​திப் பேச்​சு​வார்த்தை தோல்வி அடைந்​தால் ஹார்முஸ் நீரிணையில் தாக்​குதல் நடத்த அமெரிக்கா திட்​ட​மிட்டுள்​ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

அமெரிக்​கா, ஈரான் இடையே கடந்த 8ஆம் திகதி இருதரப்பு போர் நிறுத்​தம் அமுல் செய்​யப்​பட்​டது.

இரு வார போர் நிறுத்​தம் கடந்த 23ஆம் திகதி​யுடன் நிறைவடைந்​ததுடன், குறித்த தினமே கால​வரை​யின்றி போர் நிறுத்தத்தை நீட்​டிப்​ப​தாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு ட்ரம்ப் அறி​வித்​திருந்தார்.

போர் காரண​மாக ஹார்​முஸ் நீரிணையை ஈரான் மூடி​யுள்​ளது. இதற்கு பதிலடியாக இந்த நீரிணையின் இரு​புற​மும் அமெரிக்க போர்க்​கப்​பல்​கள் நிறுத்​தப்​பட்டுள்ளன. இந்த சூழலில் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் சமூக வலை​தளத்​தில் நேற்று வெளி​யிட்ட பதி​வில், “காலம் கடந்து சென்று கொண்​டிருக்​கிறது. ஈரான் தரப்பு விரைந்து முடிவு எடுக்க வேண்​டும்’’ என எச்​சரித்​துள்​ளார்.

ஈரான் உச்ச தலை​வர் முஜ்தப்பா காமேனி வெளியிட்டுள்ள அறிக்​கை​யில், “ஈரான் தேசப்​பற்றாளர்​களின் ஒற்​றுமை​யால் எதிரிகளின் கூட்​ட​ணி​யில் விரிசல் ஏற்​பட்டு இருக்​கிறது. ஈரான் மக்​களின் மனதில் அச்​சத்தை விதைக்க எதிரி நாடு முயற்சி செய்​கிறது. இதற்கு இடம் கொடுக்​கக்​ கூ​டாது’’ என்று தெரி​வித்​துள்​ளார்.

இதனிடையே அமெரிக்கா, ஈரான் இடையே அமைதி ஒப்​பந்​தத்தை இறுதி செய்ய பாகிஸ்​தான், துருக்​கி, எகிப்து உள்​ளிட்ட நாடு​கள் தீவிர முயற்சி செய்து வரு​கின்​றன. இஸ்லாமபாத்தில் இன்று மீண்டும் அமைதிப் பேச்சுகளன் ஆரம்பமாகியுள்ளதுடன், அமெரிக்க ஈரான் பிரதிநிதிகளும் அங்கு விரைந்துள்ளனர்.

என்றாலும், ஈரானின் சரக்கு கப்​பல்​களை அடுத்​தடுத்து கைப்​பற்றி வரு​வதாக அமெரிக்கா கூறியுள்ளதுடன், இதனால் இராணுவ மற்றும் பொருளா​தா​ர ரீ​தியி​லான நெருக்​கடியை சமாளிக்க முடி​யாமல் அமைதி ஒப்பந்தத்தில் ஈரான் கையெழுத்​திடும் என எதிர்பார்ப்பதாகவும் அமெரிக்கா தெரிவித்துள்ளது.

அமைதி பேச்​சு​வார்த்தை தோல்வி அடைந்​தால் ஹார்​முஸ் நீரிணையில் மிகப்​பெரிய தாக்​குதல் நடத்​தப்​படும் என்றும் தற்​போது 19 போர்க்கப்பல்​கள் மத்​திய கிழக்​கில் முகாமிட்டுள்​ளதாகவும் அமெரிக்கா கூறியுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here