டொராண்டோவில் உள்ள வாகன நிறுத்த மீட்டர்களில் (Parking meters) மோசடி கும்பல் போலி QR குறியீடுகளை ஒட்டி பொதுமக்களை ஏமாற்றி வருவதாக டொராண்டோ காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
அண்மைய வாரங்களில் இத்தகைய மூன்று முறைப்பாடுகள் பதிவாகியுள்ள நிலையில், இது குறித்து நிதி குற்றப்பிரிவு பொலிஸார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
வாகன ஓட்டிகள் வாகன நிறுத்தக் கட்டணம் செலுத்துவதற்காக இந்த போலி QR குறியீடுகளை ஸ்கேன் செய்யும்போது, அவை உண்மையான இணையதளம் போன்றே தோற்றமளிக்கும் ஒரு போலி தளத்திற்கு அவர்களை அழைத்துச் செல்கின்றன.
அங்கு 7 டொலர் கட்டணம் செலுத்துவதாக நினைத்து தங்கள் தகவல்களைப் பதிவிடும் நபர்களின் கணக்கிலிருந்து சுமார் 2,000 டொலர் வரை திருடப்படுவதாக காவல்துறை தெரிவித்துள்ளது.
எனவே, இவ்வாறான மோசடிகள் குறித்து டொராண்டோவில் வாழும் மற்றும் டொராண்டோவுக்கு வருகைத்தரும் பொது மக்களும் வெளிநாட்டு பயணிகளும் கவனமான இருக்க வேண்டும் என கனடா அரசு கூறியுள்ளது.

