அவசரமாக கொழும்பு வந்துள்ள இந்திய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல்: முக்கிய சந்திப்புகளுக்கு ஏற்பாடு

0
18
Article Top Ad

இந்தியாவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் (NSA) அஜித் தோவல் அவசர பயணமாக இன்று வியாழக்கிழமை இலங்கை வந்துள்ளதாக “தி இந்து“ செய்தி வெளியிட்டுள்ளது.

தலைநகர் கொழும்பில் அரசியல் தலைவர்கள் பலரை அஜித் தோவல், சந்திக்க உள்ளதாகவும் இலங்கையின் சமகால மற்றும் எதிர்கால அரசியல் மற்றும் பொருளாதார விடயங்கள் தொடர்பில் கலந்துரையாட உள்ளதாகவும் இந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

என்றாலும், அவரது இந்த பயணம் தொடர்பில் இந்திய வெளிவிவகார அமைச்சு உத்தியோகப்பூர்வ அறிவிப்புகள் எதனையும் வெளியிடவில்லை.

கொழும்பு இராஜந்திர வட்டாரங்களை மேற்கொள் காட்டி தி இந்து இந்த செய்தியை வெளியிட்டுள்ளதுடன், உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜாவுடன் இணைந்து பல்வேறு அரசியல் சந்திப்புகளை தோவல் நடத்த உள்ளதாகவும் கூறியுள்ளது.

இலங்கையில் எதிர்வரும் செப்டம்பர் 21ஆம் திகதி ஜனாதிபதித் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், அதற்கு மூன்று வாரங்களுக்கு முன்னதாக இடம்பெற்றுள்ள அஜித் தோவலின் இந்த பயணம் தொடர்பில் இராஜதந்திர மட்டத்தில் அவதானம் செலுத்தப்பட்டுள்ளது.