சனத் நிஷாந்த உள்ளிட்ட மூவருக்கு ஜூன் முதலாம் திகதிவரை விளக்கமறியல்!

0
380
Article Top Ad

ஆளும்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களான சனத் நிஷாந்த, மிலன் ஜயதிலக மற்றும் டான் பிரியசாத் மற்றும் மேலும் மூவர் தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

எதிர்வரும் ஜூன் மாதம் முதலாம் திகதிவரை அவர்களை விளக்கமறியலில் வைக்க கொழும்பு கோட்டை நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

காலி முகத்திடல் போராட்டக்காரர்கள் மீது தாக்குதல் நடத்தியதாக சந்தேகத்தின் பேரில் இவர்கள் கைது செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.