ஈஸ்டர் தாக்குதலில் கணவனை இழந்து கைப்பெண்ணானவரின் இன்றைய நிலை என்ன?

0
549
Article Top Ad

2019ம் ஏப்ரல் 21ம் திகதி உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களில் 260ற்கும் அதிகமான மக்கள் கொல்லப்பட்டனர்.

கொழும்பு கொச்சிக்கடை புனித அந்தோனியார் தேவாலயத்தில் நடைபெற்ற தாக்குதலில் 56 பேர் கொல்லப்பட்டனர்.

இதில் அன்டன் சந்தியாகு ரவீந்திரன் பெர்ணான்டோவும் பலியாகியிருந்தார். அன்னாரது இழப்பு அவரது மனைவி டிலிசியா மனோகரி பெர்ணான்டோவிற்கும் மூன்று பிள்ளைகளுக்கும் தாங்கிக்கொள்ள முடியாத பேரிழப்பாக மாறிவிட்டது.

ஈஸ்டர் தாக்குதல்களின் இரண்டாவது ஆண்டு நினைவு தினம் நெருங்கிவரும் நிலையில் டிலிசியா மனோகரி பெர்ணான்டோவை குளோப் தமிழுக்காக நேர்காணல் செய்திருந்தோம்.

கடந்த இரண்டு வருடங்கள் எவ்வாறு தமது வாழ்க்கையை மாற்றிப்போட்டுள்ளது என்பதை இதயத்தின் ஆழத்திலிருந்து அவர் பகிர்ந்துகொண்டார்.