ஆட்டநிர்ணய சதியில் ஈடுபட்டமைக்காக முன்னாள் இலங்கை வீரருக்கு 8 ஆண்டுகள் தடை

0
239
Article Top Ad

ஆட்டநிர்ணய சதியில் ஈடுபட்டமைக்காக இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் தில்ஹார லொக்குஹெட்டிகேவிற்கு ICC 8 வருட தடை விதித்துள்ளது.

இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் தில்ஹார லொக்குஹெட்டிகே இலங்கை அணிக்காக ஒன்பது ஒருநாள் போட்டிகளிலும் இரண்டு T 20 போட்டிகளிலும் விளையாடியுள்ளார்.

இந்நிலையில், ஷார்ஜாவில் நடந்த T10 போட்டியின் தொடரின்போது லோகுஹெட்டிகே ஆட்டநிர்ணயச் சதியில் ஈடுபட்டதாக ஐக்கிய இராச்சியத்தின் கிரிக்கட் சங்கம் குற்றஞ்சாட்டியிருந்தது.

இதனைதொடர்ந்து ஐசிசி ஊழல் தடுப்பு விதிமுறைகளை மீறியதற்காக குறித்த தடை விதிக்கப்பட்டுள்ளது.

இதன்படி 8 வருடம் அவருக்கு எவ்வித கிரிக்கெட் போட்டிகளிலும் கலந்து கொள்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

அவருக்கு எதிரான இந்த தடை 2019 ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 3ம் திகதி முதல் நடைமுறைப்படுத்தப் பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.