இளவயது கனவை நனவாக்கிய அவுஸ்திரேலிய வீராங்கனை ஆஷ்லி பார்டி!

0
205
Article Top Ad

உலகின் முதல் நிலை டென்னிஸ் வீராங்கனை ஆஷ்லி பார்டி, விம்பிள்டன் பகிரங்க டென்னிஸ் தொடரின் பெண்களுக்கான ஒற்றையர் பிரிவு போட்டியில்  வெற்றிபெற்று மகுடம் சூடியுள்ளார்.

1980 ஆம் ஆண்டில் கூலாகாங் வெற்றிபெற்ற பின்னர் விம்பிள்டனை வென்ற முதல் அவுஸ்ரேலிய பெண்மணி என்ற பெருமையையும் ஆஷ்லி பார்டி பெற்றுள்ளார்.

நேற்று சனிக்கிழமை விறுவிறுப்பாக இடம்பெற்ற இப்போட்டியில் செக்.குடியரசின் கரோலினா பிளிஸ்கோவாவை  ஆஷ்லே பார்டி எதிர்கொண்டார்.

இப்போட்டியின் முதல் செட்டை 6-3 என ஆஷ்லே பார்டி கைப்பற்ற, டை பிரேக் வரை நீண்ட இரண்டாவது செட்டை 7-6 என கரோலினா பிளிஸ்கோவா கைப்பற்றினார்.

இதனால் வெற்றியை தீர்மானிக்கும் மூன்றாவது செட்டை 6-3 என மீண்டும் கைப்பற்றி ஆஷ்லி பார்டி சம்பியன் பட்டத்தை கைப்பற்றினார்.

தனது இளவயது முதலே விம்பிள்டன் போட்டிகளில் சம்பியன் பட்டம் வெல்லும் கனவைக்கொண்டிருந்த ஆஷ்லி பார்ட்டி 2010ம் ஆண்டில் தொழில்சார் டென்னிஸ் வீராங்கனையாக மாறியிருந்தார். இதற்கு முன்பாக 22019ம் ஆண்டில் பிரஞ்சு பகிரங்கப் பட்டத்தை வென்றிருந்த பார்டி கடந்தாண்டு அவுஸ்திரேலிய பகிரங்க டென்னிஸ் போட்டிகளில் அரையிறுதிவரை முன்னேறியிருந்தார்.

ஆஷ்லி பார்ட்டி சிறிவு காலம் அணி விளையாட்டில் பங்கேற்ற விரும்பி அவுஸ்திரேலிய மகளிர் கிரிக்கட் அணியில் இணைந்து சர்வதேச போட்டிகளிலும் பங்கெடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.