இலங்கையில் பத்து நாட்களில் 1,400 பேர் கொரோனாவால் பலி

0
181
Article Top Ad

இலங்கையில் கடந்த பத்து நாட்களில் மாத்திரம் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1,400 பேர் கொவிட்-19 ஆல் உயிரிழந்துள்ளனர்

இலங்கையில் கொவிட்-19 தொற்று தொடர்பான மேலும் 171 மரணங்கள் நேற்று (16) பதிவாகியுள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அசேல குணவர்தன உறுதிப்படுத்தியுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

அந்த வகையில் இலங்கையில் ஏற்கனவே 6,263 கொரோனா மரணங்கள் பதிவானதாக அறிவிக்கப்படட்ட நிலையில், தற்போது அறிவிக்கப்பட்டுள்ள 171 மரணங்களுடன்இ இலங்கையில் இதுவரை 6,434 கொவிட்-19 தொடர்பான மரணங்கள் பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இவ்வாறு மரணமடைந்த 171 பேரில், 102 பேர் ஆண்கள்இ 69 பேர் பெண்கள் என்பதுடன்இ 60 வயதுக்கு மேற்பட்டோர் 134 பேர் என்பதும் குறிப்பிடத்தக்கது.