தேர்தலில் சு.க. தனித்தே போட்டி! – கட்சியின் அநுராதபுரம் மாவட்டக் குழு தீர்மானம்

0
186
Article Top Ad

 

 

“வெற்றியோ, தோல்வியோ எதுவாக இருந்தாலும் பரவாயில்லை. எதிர்வரும் தேர்தலில் ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தனிக்கட்சியாகப் போட்டியிட வேண்டும்.”

– இவ்வாறு ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் அநுராதபுரம் மாவட்டக் குழு வலியுறுத்தியுள்ளது.

இது தொடர்பில் தீர்மானமும் நிறைவேற்றப்பட்டுள்ளது.

ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் அநுராதபுரம் மாவட்டக் குழுக் கூட்டம் இராஜாங்க அமைச்சர் துமிந்த திஸாநாயக்க தலைமையில் நேற்று நடைபெற்றது. இதன்போதே மேற்படி தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

“அரசால் எமது கட்சிக்கு வழங்கப்பட்ட உறுதிமொழிகள் மீறப்பட்டுள்ளன. புறக்கணிப்புகள் இடம்பெறுகின்றன. எனவே, முடிவு என்னவாக இருந்தாலும் அடுத்த தேர்தலில் தனித்துப் போட்டியிட வேண்டும்” என்றும் வலியுறுத்தப்பட்டுள்ளது.
………