சீன டென்னிஸ் நட்சத்திரம் பெங் ஷுவாய் தொடர்பாக நவோமி ஒசாகா கவலை

0
183
Article Top Ad

சீன டென்னிஸ் வீராங்கனை பெங் ஷுவாயின் நிலைமை குறித்து உலக டென்னிஸ் சம்பியனான நவோமி ஒசாகா கவலை வெளியிட்டுள்ளார்.

சீனாவின் மிகப்பெரிய விளையாட்டு நட்சத்திரங்களில் ஒருவரான பெங் ஷுவாய், சீன உயர் அதிகாரி ஒருவருக்கு எதிராக பாலியல் குற்றச்சாட்டுகளை முன்வைத்தார்.

இந்நிலையில் அவர் பாதுகாப்பாக இருக்கிறார், உடல் ரீதியாக எந்த அச்சுறுத்தலுக்கும் ஆளாகவில்லை என்பதை உறுதிப்படுத்தியுள்ளதாக பெண்கள் டென்னிஸ் சங்கம் கூறியது.

இருப்பினும், அவர்களால் நேரடியாக அவளை அணுக முடியவில்லை. இந்நிலையில் #WhereisPengShuai என்ற ஹேஷ்டேக்கைப் பயன்படுத்தி நவோமி ஒசாகா டிவிட்டரில் பதிவிட்டுள்ளார்.

“பாலியல் துஷ்பிரயோகம் செய்யப்பட்டதை வெளிப்படுத்திய சிறிது நேரத்திலேயே காணாமல் போன சக டென்னிஸ் வீராங்கனையைப் பற்றி எனக்கு சமீபத்தில் தெரிவிக்கப்பட்டது.

பெங் ஷுவாய் மற்றும் அவரது குடும்பத்தினர் பாதுகாப்பாகவும் நலமாகவும் உள்ளனர் என்று நம்புகிறேன். தற்போது நான் அதிர்ச்சியில் உள்ளேன். ” என பதிவிட்டுள்ளார்.

இந்த வார தொடக்கத்தில், உலகின் முதல்நிலை டென்னிஸ் வீரரான நோவக் ஜோகோவிச், இந்த சம்பவத்தை கண்டு அதிர்ச்சியடைந்துள்ளதாக கூறியிருந்தமை குறிப்பிடத்தக்கது.