நாளை ஆரம்பமாகும் அவுஸ்திரேலிய ஓபன் போட்டிகளில் விளையாடுவாரா ஜோகோவிச் ? நீதிமன்றத்தின் தீர்ப்பு இன்று

0
179
Article Top Ad

டென்னிஸ் வீரர் நோவாக் ஜோக்கோவிச் அவுஸ்திரேலியாவில் தங்குவதற்கான விசா இரண்டாவது முறையாக ரத்து செய்யப்பட்ட பின்னர் அவர் தற்போது தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளார்.

நாளை திங்களன்று அவுஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டியில் நோவாக் ஜோக்கோவிச் விளையாடுவாரா? நாட்டிலிருந்து வெளியேற்றப்படுவாரா என்று இன்று ஞாயிறன்று நீதிமன்றம் முடிவு செய்யும்.

கொரோனா வைரஸ் தடுப்பூசி எடுத்துக் கொள்ளாததால் அவருடைய விசா முதலில் ரத்து செய்யப்பட்டது. பின்னர் நீதிமன்றத்தில் மூலம் அவர் அவுஸ்திரேலியாவில் தங்க அனுமதி பெற்றார்.

எனினும் இரண்டாவது முறையாகவும் அவரது விசா ரத்து செய்யப்பட்டது. தடுப்பூசி செலுத்திக்கொள்ளாத அவர் பொது மக்களுக்கு அச்சுறுத்தலாக இருப்பார் என்று அதற்கு அவுஸ்திரேலிய அரசு காரணம் கூறியது.