ஜனாதிபதி பிரித்தானியாவிற்கு பயணம்!

0
78
Article Top Ad

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பிரித்தானியாவிற்கு பயணம் செய்துள்ளார்.

இரண்டாம் எலிசபெத் மகாராணியின் இறுதிச் சடங்கில் பங்கேற்பதற்காக அவர் சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இன்று (17) அதிகாலை 3.15 மணியளவில் ஜனாதிபதி பிரித்தானியாவிற்கு பயணம் செய்துள்ளார்.

ஜனாதிபதியாக பதவியேற்றதன் பின்னர் ரணில் விக்கிரமசிங்க மேற்கொள்ளும் முதலாவது உத்தியோகபூர்வ வெளிநாட்டு விஜயம் இதுவாகும் என தெரிவிக்கப்படுகிறது.

இரண்டாம் எலிசபெத் மகாராணியின் இறுதிச் சடங்கு வரும் 19ம் திகதி நடைபெறவுள்ளது.