ஆசியக்கிண்ண கிரிக்கெட் தொடர் : மூன்றாவது சூப்பர் 4 சுற்றில் இந்தியாவை எதிர்கொள்ளும் பாகிஸ்தான்

0
38
Article Top Ad

ஆசிய கிண்ண கிரிக்கெட் தொடரின் சூப்பர் 4 சுற்றின் மூன்றாவது போட்டி இன்று நடைபெறவுள்ளது.

இந்த போட்டியில் இந்தியா அணியை பாகிஸ்தான் அணி எதிர்கொள்ளவுள்ளது.

குறித்த போட்டியானது ஆர்.பிரேமதாச சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் இன்று நண்பகல் மூன்று மணிக்கு ஆரம்பமாகவுள்ளது.

இதற்கு முன்னர் கடந்த இரண்டாம் திகதி இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையில் நடைபெற்ற போட்டி மழை காரணமாக ரத்து செய்யப்பட்டது.

இதனால் ரசிகர்கள் பெரிதும் ஏமாற்றமடைந்தனர்.

அதற்கமைய இன்றைய போட்டியிலும் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் ஏற்கனவே அறிவித்திருந்த நிலையில், மழையால் ஆட்டம் ரத்து செய்யப்படும் நிலை ஏற்படுமேயானால் ரிசர்வ் நாளில் ஆட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் இந்த ரிசர்வ்முறை இந்தியா-பாகிஸ்தான் போட்டிக்கு மாத்திரம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இன்று போட்டியானது நடைபெறாவிட்டால் இந்த போட்டி நாளை நடைபெறும் எனவும் இன்றைய போட்டிக்கான டிக்கெட்டுகளை நாளை பயன்படுத்த முடியும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.